புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசினார்.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173, ஷுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.