வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் மார்ச் முதல் வாரத்தில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் குறைந்தது, அமெரிக்காவின் வர்த்தக போர், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் உள்ள முதலீட்டை அதிக அளவில் திரும்பப் பெற்று வருவதே சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.