திருவனந்தபுரம்: இஸ்ரேலுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற போது ஜோர்டான் எல்லையில் வீரர்கள் சுட்டதில் கேரளாவைச் சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ளது தம்பா. இங்கு ராஜீவ் காந்தி நகருக்கு அருகில் புதுவல் புரையிடம் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் கேப்ரியல் பெரைரா (47). இவரது உறவினர் எடிசன் (43). இவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். இவர்கள் இருவர் மற்றும் மேலும் 2 பேர் என மொத்தம் 4 பேர் இஸ்ரேலில் வேலை பார்க்க விரும்பியுள்ளனர். ஒரு ஏஜென்சி மூலம் அனைவரும் முதலில் ஜோர்டானுக்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர்.