ஹைதராபாத்: ஈம காரியங்கள் செய்ய பணம் இல்லாததால், தாய் இறந்த துக்கம் தாளாமல் 9 நாட்கள் வரை வீட்டை பூட்டிக்கொண்டு பட்டினியோடு 2 மகள்கள் தங்கி இருந்துள்ளனர்.
ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜு. இவருக்கும் லலிதா (45) என்பவருக்கும் கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரவளிகா (24), யஷ்வதா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில் ராஜுவுக்கும் லலிதாவுக்கும் (45) கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனை தொடர்ந்து லலிதா தனது வயதான தாய் மற்றும் மகள்களுடன் செகந்திராபாத் புத்தா நகரில் வசித்து வந்தார்.