கீவ்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும், 19 தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி உள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், "முதன்மைத் தளபதி சிர்ஸ்கியின் காலை 6 மணி அறிக்கையின்படி, பல்வேறு முன்னணி திசைகளில் இருந்த ஏற்கனவே ரஷ்யாவின் 59 குண்டுவீச்சுத் தாக்குதல்களும், அந்நாட்டுப் படை பிரிவுகளின் 5 தாக்குதல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்டாரோபில்ஸ்க் செயல்பாட்டுக் குழுவும் ஒரு தாக்குதலை பதிவு செய்துள்ளது. டொனேட்ஸ்க் ஒடிஜி பிரிவில் மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன. எதிரிகள் ஏராளமான எஃப்பிவி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.