
சென்னை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நிரூபர்களிடம் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்றியை மொத்த நாடும் கொண்டாடுவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டில் ஆடவர், மகளிர் கிரிக்கெட் சமமாக நடத்தப்படுவதாகவே உணர்கிறேன். ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சத்தியத்தை நாங்கள் அடைந்துவிட்டோம். இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கமாக இருக்கும். ஏராளமான இளம் வீராங்கனைகள் உந்துதல் பெறுவார்கள்.

