சென்னை: உலகளாவிய வர்த்தக மாற்றங்களுக்கு நடுவிலும், குறைந்த இழப்பை எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளதாக துக்ளக் இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார். சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 19-வது வி.நாராயணன் நினைவுச் சொற்பொழிவு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது: தற்போதைய சர்வதேச அரசியல் மாற்றங்களால் உலகமயமாதல் நடவடிக்கைகளுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியா போன்ற பெரிய நாடுகளை பொருத்தவரை, பிற நாடுகளுடன் வலிமையான நல்லுறவை பேண முன்வர வேண்டும்.