வாஷிங்டன்: தமிழ்நாட்டில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கல்வியறிவின் மூலம் ஸ்டான்போர்டு பல்கலையில் கடந்த 1993ல் உதவித் தொகை பெற்று உயர்கல்வியை முடித்தவர் சுந்தர் பிச்சை. 2004ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த அவர் கடந்த 2015ல் கூகுள் சிஇஓவாகவும், 2019ல் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
அந்த வகையில், சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார் சுந்தர் பிச்சை appeared first on Dinakaran.