புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியில் ரூ.22 கோடியில் ‘ராமாயண் வாட்டிகா’ எனும் பெயரில் ஒரு புதிய அழகான பூங்கா 6 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.
இப்பூங்காவில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்படுகிறது. உலகின் மிகப்பெரிய குஜராத்தில் வல்லபபாய் படேல் சிலையை வடித்த பத்ம ஸ்ரீ ராம் சுத்தார் இந்த சிலையை வடித்துள்ளார். ராமர் கடந்த சித்ரகுட், கிஷ்கிந்தா, துரோணகிரி உள்ளிட்ட 6 வனப்பகுதிகளின் 60 சிற்பக் காட்சிகளும் பூங்காவில் வடிவமைக்கப்படுகின்றன.