புதுடெல்லி: ஊட்டியில் துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாட்டுக்கு குடியரசு துணைத்தலைவர் தலைமை வகிக்கிறார் என அவரது செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது, ஏப்ரல் 25 அன்று ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க உள்ளார்.