புதுடெல்லி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் தாக்குதல் நடந்துள்ளது, பாகிஸ்தானின் இந்த செயலை நாங்கள் தவறாகக் கருதுகிறோம்.