பெங்களூரு: எச்1பி விசாவுக்கான புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்டம்பரில் வெளியிட்டார். அதில், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிகரிப்பதாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்) அறிவிப்பு வெளியிட்டார்.
ஏற்கெனவே 2,000 டாலர் என்பதிலிருந்து 5 ஆயிரம் டாலராக கட்டணத்தை அதிகரித்த ட்ரம்ப் தற்போது பன்மடங்கு உயர்த்தியது திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்தது.