
கோவை: ‘என்டிசி’ தொழிலாளர்களுக்கு நிலுவை வைக்கப்பட்ட ஊதியம் வழங்குவது தொடர்பாக டெல்லியில் இன்று தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மத்திய ஜவுளித் துறை செயலாளரை நேரில் சந்தித்து பேசியதை அடுத்து, ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கட்டுப்பாட்டின் கீழ் 7 நூற்பாலைகள் உள்ளன. கரோனாவுக்கு பிறகு இந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் பாதி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களாக ஊதியம் நிலுவை வைக்கப்பட்டது.

