286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆகும் தருணத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்றுக் கவனித்தன. அந்த ஸ்பால்ஷ் டவுன் வெற்றிகரமாக அமைந்து அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் வெளியே வந்த தருணத்தில் அவர்களின் கையசைவுகளும், புன்னகைகளும் உலகளவில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கடத்தியது என்றே கூறலாம்.