சனா: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஏமன் நாட்டின் பகுதியை குறிவைத்து தீவிர தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்க படைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஹவுதி கிளர்ச்சிக் குழுவை ஆதரிப்பதை நிறுத்துமாறு ஈரானை அவர் எச்சரித்துள்ளார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடல்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தும் வரையில் தங்களது தரப்பில் தாக்குதல் தொடரும் என ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க தாக்குதலில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.