புதுடெல்லி: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட கருத்து: “எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைய கடந்த காலங்களில் எதிர்ப்புக் குரல் எழுப்பியதில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், தற்போது அந்த நிறுவனங்கள் அனைத்து ஆட்சேபனைகளையும் மறந்து ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன.