
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். 2025-26 முதல் 2030-31 வரையிலான காலத்துக்கு சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் போட்டித் தன்மையை அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்கிறது.

