புதுடெல்லி: “ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள 360 கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு அந்த சந்திப்பு தொடர்பாக சமூகவலைதளத்தில் தனது கருத்தினை அமித் ஷா இவ்வாறாகப் பகிர்ந்துள்ளது. அவரது இந்த ட்வீட் கவனம் பெற்று வெகுவாக விமர்சனங்களை ஈர்த்து வருகிறது.