புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நபரால் நடத்தப்படக்கூடிய அமைப்பு அல்ல என்றும் அது 3 நபர்களைக் கொண்ட அமைப்பு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 18-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை சுட்டிக்காட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், “தேர்தல் நடத்தை விதிகளை பாஜக மீறுவதாகக் கூறப்படுவதை தேர்தல் ஆணையம் புறக்கணித்து வருகிறது. ஓய்வுக்குப் பிறகான அரசு பணியைப் பெறுவதற்காக ராஜீவ் குமார் பாஜக மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.” என நேற்று குற்றஞ்சாட்டி இருந்தார்.