சென்னை: தங்கம் விலை இன்று (ஆக.29) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. பவுனுக்கு ரூ.1040 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சவரன் விலை ரூ.76,000-ஐ கடந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.9,470-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,760-க்கும் விற்பனை ஆனது. கடந்த 8-ம் தேதி இந்த விலையில் ஒரு பவுன் தங்கம் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதே விலையைத் தொட்டது.