சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) டைடல் பார்க் சந்திப்பில் ரூ.27.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பாலம் மற்றும் ரூ.11.30 கோடியில் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகரின் தொழில் வாய்ப்பை பெருக்கும் வகையிலும், சென்னையை தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி மாநிலமாக திகழும் வகையிலும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, டைடல் பார்க் எனப்படும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை ராஜீவ் காந்தி சாலையில் அமைத்தார், அதனைத் தொடர்ந்து அந்த சாலையில் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை தொடர்ந்து அமைத்து வருகின்றன.