திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ. 3,800 கோடி முதலீட்டில் டாடா குழுமத்தின் சோலார் தொழிற்சாலையில் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.2,574 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த 2 தொழிற்சாலைகள் மூலம் 6,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சோலார் நிறுவனத்தில் உற்பத்தியை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.