புதுடெல்லி: கடந்த மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் 17 வகையான வரிகள், 13 வகையான செஸ் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. மே மாதம் ரூ.1.73 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.74 லட்சம் கோடி, ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி, ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி, செப்டம்பரில் ரூ.1.73 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி, டிசம்பரில் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது.