மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தக நேர துவக்கத்தின்போது கடும் சரிவை எதிர்கொண்டது.
அதன்படி இன்று (மார்ச் 11) காலை வர்த்தக நேர துவகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் சரிந்தது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் இறங்கியது. குறிப்பாக ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டுள்ளன.