இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடைசியாக அவர் அரசியல் கட்சிகளுக்கு ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டுதான் சென்றிருக்கிறார்.
‘‘தேர்தல் நடைபெறும் போது ஒவ்வொரு படிநிலையிலும் ஏதாவது தவறு நேர்ந்தால் ஆட்சேபனை எழுப்பலாம். மேல்முறையீடு செய்யலாம். சந்தேகத்தை உருவாக்க முயற்சிப்பது விரும்பத்தகாத செயல். தேர்தல் முடிவு சாதகமாக இல்லை என்பதற்காக அதை ஏற்காத கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மிக வசதியாக பலிகடா ஆக்கப்படுகிறது’’ என்று தன் ஆதங்கத்தை விட்டு சென்றிருக்கிறார்.