சென்னை: “கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம். உள்ளூர் மக்களால் தினசரி சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது. எனவே, அவர்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்” என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 18) திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசும்போது, “திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் சமூக நீதிக் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். அந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இக்கோயிலில் ரோப் கார் வசதி செய்து தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது. எனவே, கோயிலுக்கு மாற்றுப் பாதை அமைக்க வேண்டும்” என கோரினார்.