சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்-செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்திட அனுமதியளித்து, அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்திட, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தங்களுக்கான அடையாள அட்டைகளை பெறுவதற்கு, கலைஞர்களின் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன், தங்களின் பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படங்களை இணைத்து, “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், பொன்னி, எண் 31, பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028” என்ற முகவரிக்கு, வரும் 10.06.2025க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
The post கலைமாமணி விருதாளர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.