புதுடெல்லி: “காடுகளில் நக்சலிஸம் அழிந்துவிட்டது. என்றாலும் சில அரசியல் கட்சிகள் அந்த சித்தாந்தத்தை எதிரொலிப்பதால் நகர்ப்புறங்களில் அது வேகமாக வேரூன்றி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியா இன்று பெரிய அளவில் சிந்திக்கிறது, பெரிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறது. பெரிய அளவிலான முடிவுகளை வெளிப்படுத்துகிறது. நாட்டின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவு இது. நாடு பெரிய அளவிலான விருப்பங்களுடன் முன்னேறி வருகிறது.