காரைக்குடி அருகே காவல் நிலையத்துக்குள் பெண் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பிரணிதா. இவர் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, புகார் மனு தொடர்பான தகவலுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது, அவர்களுக்கும், பிரணிதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.