புதுடெல்லி: இந்திய வர்த்தக கூட்டமைப்பு (ஐசிசி) சார்பில் 17-வது நிலக்கரி உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசகர் (எரிசக்தி) ராஜ்நாத் ராம் பேசியதாவது:
கார்பன் டை ஆக்ஸைடை சேமித்து பயன்படுத்தும் திட்டத்தை (சிசியுஎஸ்) அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சில தொழில்நுட்பங்களுக்கு 100% அரசு நிதியுதவி வழங்கப்படும். மொத்த ஊக்கத் தொகை 50% முதல் 100% வரை இருக்கும். இந்த ஊக்கத் தொகை, தொழில் துறையினர் கார்பன் சேமிப்பு தொழில்நுட்பங்களை எளிதில் கடைபிடிக்கவும் அவற்றை நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தி அமைப்புகளுடன் இணைக்கவும் உதவும் என்றார்.