நாமக்கல்: கிஸான் கடன் அட்டை உச்சவரம்பு ரூ.3 லட்சத்தி லிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்க மாநில தலைவர் ஆர்.வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கிஸான் கடன் அட்டை உச்சவரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதால் எந்த பலனும் இல்லை.