புதுடெல்லி: கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சுமார் 1,000 முக்கியப் பிரமுகர்கள் (விஐபிகள்) வருகை புரிந்துள்ளனர். 7 மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், 190 நீதிபதிகள் என இவர்களின் பட்டியல் நீள்கிறது.
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கி 45 நாட்கள் நடைபெற்றது. இந்த 45 நாட்களில் கும்பமேளாவுக்கு வருகை புரிந்த 953 விஐபிகள் அருகிலுள்ள வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் வந்தனர்.