சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஏப். 10, 12ம் தேதிகளில் 20 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10, 12ல் பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
The post கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.