பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 38-வது ‘கேன்ஸ் ஓபன்’ சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஈரோட்டைச் சேர்ந்த இனியன் கடைசி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த பிரனேஷை வீழ்த்தி 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். மற்றாரு இந்திய வீரரான ஆராத்யா கார்க் 7 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். கஜகஸ்தானின் காஸிபெக் நோடெர்பெக் 3-வது இடம் பிடித்தார்.