கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றின்கரையில் மறைந்த காந்தியவாதி பி.கோபிநாதன் நாயரின் சிலையை காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
விழாவில் அவர் தனது உரையில், நாட்டின் ஆன்மாவை புற்றுநோய் முடக்கியுள்ளதாகவும் அந்த நோயை சங் பரிவார் (ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகள்) பரப்புவதாகவும் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.