கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளை விசாரணைக்கு ஆஜராகும் படிசிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள்சாமியை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து நேற்று காலை பெருமாள்சாமி கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை நடத்தினார்.
The post கொடநாடு வழக்கு ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை appeared first on Dinakaran.