கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10-வது நாளில், தாய் கழிப்பறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி(21). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நிறை மாத கர்ப்பிணியான எலிசபெத் ராணி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக கடந்த 26-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.