கோவை சாடிவயல் அருகே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஒரு யானை விவசாயி கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஜே.சி.பி., புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.