புதுடெல்லி: சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவந்து ஆய்வுசெய்யும் வகையில், சந்திரயான்-4 வரும் 2027-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “சந்திரயான் 4 திட்டம் குறைந்தது இரண்டு தனித்தனியான ஹெவிலிஃப்ட் எல்விஎம் 6 ராக்கெட்களை ஏவுவதை உள்ளடக்கியது. இவை அந்தப் பயணத்தின்போது ஐந்து வெவ்வேறு கூறுகளை சுமந்து சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும். சந்திரயான் 4 திட்டம், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டது.