புதுச்சேரி: சர்வதேச கடல் எல்லைக்கோட்டை கடப்பதால் ஏற்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மீனவர்கள் அந்தமான் கடலை நோக்கி செல்ல ஊக்குவிக்கவுள்ளோம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ராஜ்நிவாஸில் இருந்து வந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பேரவைத்தலைவர் செல்வம் பூங்கொத்து தந்து வரவேற்றார். அதையடுத்து பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.