தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், வருவாய்க் கிராமங்கள் உள்ளிட்டவற்றில் இருக்கிற சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இது சமத்துவச் சமூகத்தை அமைக்கிற முன்னெடுப்பாக அமைந்தபோதிலும், அதன் சாத்தியக்கூறுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அம்சங்களும் இருப்பதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.