சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
பத்ம விபூஷன் விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும் கே.பராசரன், 75 ஆண்டுகாலமாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதை கொண்டாடும் வகையில் பவள விழாவும், 50 ஆண்டுகளாக மூத்த வழக்கறிஞராக நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் பொன் விழாவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பி்ல் நேற்று கொண்டாடப்பட்டது.