
‘கூட்டணி கட்சிகளின் ஆக பெரிய பலம்தான் திமுகவின் பலம்’ – இதை அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தலைவர்கள் நன்றாகவே உணர்ந்து, இந்தத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வருகின்றனர்.
யாருக்கு எத்தனை சீட் என்பதைக் காட்டிலும், யாருக்கு எந்தத் தொகுதி என்பதில் பெரும் போட்டி தற்போதே நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியை தங்கள் வசம் பெற்று விட வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் தற்போதே தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவின் கே.ஏ.பாண்டியன், இத்தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கிறார். அதிமுக தரப்பில் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

