
கோவை: “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநில விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கோவை சின்னியம் பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவ.13) நடந்தது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: “தமிழகத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை, விவசாய பணிகளை தவிர அனைத்து வேலைகளையும் பார்க்க வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயத்தை முன்னுரிமை படுத்துவதில்லை.

