
தேர்தல் சமயத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் வேண்டாம் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக்கினார் ஸ்டாலின். ஆனால், பொன்முடிக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரான லட்சுமணன் எம்எல்ஏ-வுக்கும் இடையில் மீண்டும் உரசல் ஆரம்பித்துவிட்டது.
எஸ்ஐஆரைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் விழுப்புரத்திலும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது லட்சுமணனின் மத்திய மாவட்ட எல்லைக்குள் வந்ததால் இதற்கான ஏற்பாடுகளை அவரே முன்னின்று கவனித்தார்.

