
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்த மு.தமிமுன் அன்சாரி, 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2015-ல் அந்த கட்சியில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியை (மஜக) தொடங்கிய தமிமுன் அன்சாரி, 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2019 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார். அந்த தேர்தல் மட்டுமின்றி, 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 மக்களவை தேர்தல் மற்றும் வரவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் பயணிக்கும் தமிமுன் அன்சாரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த சிறப்பு பேட்டி:

