சென்னை: வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் விளக்க கடிதம் அளிக்க உள்ளனர். நேற்று ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனுக்கு 4 வார அவகாசம் கேட்டு சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் போலீசில் மனு அளித்தனர். இன்று ஆஜராக வேண்டும் என நீலாங்கரை சீமான் வீட்டில் நேற்று மதியம் சம்மன் ஒட்டினர். இது தொடர்பாக காலை 11 மணிக்குவளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் வழக்கறிஞர்கள் விளக்க கடிதம் தர உள்ளனர்.
The post சீமான் வழக்கறிஞர்கள் மீண்டும் விளக்க கடிதம் appeared first on Dinakaran.