லண்டன்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்போர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி உள்ளனர். அவர்களது பயணம், தற்போது 9 மாதங்களை எட்டியுள்ளது.
அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருவரும் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 16-ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. சுனிதாவும், வில்மோரும் விண்வெளி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ -9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள். இந்த விண்கலம் செப்டம்பரில் நிலையத்தை அடைந்தது.
நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகியோரும் சுனிதாவுடன் திரும்பும் பயணத்தில் வருவார்கள். இருவரும் க்ரூ-9 மிஷன் மூலம் நிலையத்தை அடைந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் பிப்ரவரியில் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தனர். இப்போது. மார்ச் 16 அன்று நால்வரும் ஒன்றாகத் திரும்புவார்கள் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post சுனிதா வில்லியம்ஸ் வரும் 16-ம் தேதி பூமிக்குத் திரும்புகிறார்: ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் அழைத்து வரப்படுவதாக நாசா அறிவிப்பு appeared first on Dinakaran.