சென்னை: சென்னை அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகள் ஆண்டாள் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் உள்ள பிரபல தொழிலதிபரின் 4வது மகள் ஆண்டாள் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முழுமையான சோதனைக்கு பிறகே, உண்மையான காரணம் தெரியவர வாய்ப்புள்ளது. சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post சென்னையில் பிரபல தொழிலதிபர் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: 7பேர் கொண்ட அதிகாரிகள் காலையில் இருந்து ஆய்வு appeared first on Dinakaran.