சென்னையில் 2-வது ஆட்டோமேஷன் கண்காட்சி வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது.
தென் மண்டல ஆட்டோமேஷன் கண்காட்சி கடந்த 2023-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இது வெற்றிபெற்றதையடுத்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை இந்த கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 2-வது தென்மண்டல ஆட்டோமேஷன் கண்காட்சியை மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் சென்னையில் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.